குடும்ப சண்டையை போஸ்டர் அடித்து ஒட்டிய கணவர்… இது மதுரை ஸ்டைல்!!

 

குடும்ப சண்டையை போஸ்டர் அடித்து ஒட்டிய கணவர்… இது மதுரை ஸ்டைல்!!

மதுரையில் குடும்ப சண்டை காரணமாக உறவினர்கள் காதணி விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என கணவர் போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் அதிர்ச்சி கலந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரையில் குடும்ப சண்டை காரணமாக உறவினர்கள் காதணி விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என கணவர் போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் அதிர்ச்சி கலந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செல்லூர் பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக ஏற்பட்ட பிரச்னையால் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி அவரது தாய் வீட்டாருடனும், கர்ணன் தனியாகவும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் குழந்தைகளுக்கு கடந்த 22 ஆம் தேதி காதணி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவை அவரது மனைவி குடும்பத்தை சேர்ந்திருந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த தகவலை தெரிந்த கர்ணன், மனைவி நடத்தும் காதணி விழாவில் தன்னை சார்ந்த உறவினர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து மதுரை முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியதையடுத்து நகைச்சுவை கலந்த விமர்சனங்களை நெட்டிசன்கள் முன் வைக்கின்றனர்.