குடும்பத் தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் ! விஷக் காபியை குடித்த 4 குழந்தைகள் உயிருக்குப் போராட்டம் !

 

குடும்பத் தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் ! விஷக் காபியை குடித்த 4 குழந்தைகள் உயிருக்குப் போராட்டம் !

குர்னூல் மாவட்டதை சேர்ந்த வரலட்சுமி என்பவருக்கும் நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் குடும்பத் தகராறில் 4 குழந்தைகளுக்கு விஷம் கலந்த காபியை தாய் குடித்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

குர்னூல் மாவட்டதை சேர்ந்த வரலட்சுமி என்பவருக்கும் நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. கணவர் அடிக்கடி சண்டை போடுவதால் வேதனையின் விரக்தியில் இருந்த வரலட்சுமி தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்துள்ளார். ஒருவேளை தன்னுடைய மரணத்திற்கு பின் குழந்தைகள் அனாதைகள் ஆகிவிடுவார்கள் என்ற பயத்தினாலோ என்னவோ அவர்களையும் கொன்று விட முடிவு செய்தார். பின்னர் மாலைப் பொழுதில் சுடச்சுட காபி போட்டு எடுத்து வந்த வரலட்சுமி விஷம் கலந்துள்ளார். பின்னர் அவரின் 4 குழந்தைகளுக்கும் அது விஷம் என தெரியாமல் குடித்து விட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளளனர். இதைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வரலட்சுமி மீதம் இருந்த விஷம் கலந்த காபியை தானும் குடித்து மயங்கி விழுந்தார்.  

விஷம் குடித்த ஆந்திர குழந்தைகள்

பின்னர் 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் சிகிச்சை பலனின்றி வரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இறைவன் அருளால் உயிர் பிழைத்த 4 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார் பெண்ணின் கணவர், உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் எடுத்த ஒரு தவறான முடிவால் 4 குழந்தைகள் தன்னுடைய தாயை இழந்த நிலையில் கணவரும் மனைவியை இழந்து தவித்து வருகிறார்.