குடும்பத்தையே  குத்தகைக்கு எடுத்து,குதறி எடுத்தனர் -அபலை பெண்ணை சீரழித்த அப்பாவும்  மகனும் … 

 

குடும்பத்தையே  குத்தகைக்கு எடுத்து,குதறி எடுத்தனர் -அபலை பெண்ணை சீரழித்த அப்பாவும்  மகனும் … 

அஹமதாபாத்தில் ஒரு தந்தையை இழந்த ஒரு தாயையும் அவரது மகளையும் படிக்க வைப்பதாக கூட்டி வந்து சிறுமியை மூன்று ஆண்டுகளாக 75 வயது அப்பாவும் ,அவரது மகனும் மாறி  மாறி  பலாத்காரம் செய்த  சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது .

அஹமதாபாத்தில் ஒரு தந்தையை இழந்த ஒரு தாயையும் அவரது மகளையும் படிக்க வைப்பதாக கூட்டி வந்து சிறுமியை மூன்று ஆண்டுகளாக 75 வயது அப்பாவும் ,அவரது மகனும் மாறி  மாறி  பலாத்காரம் செய்த  சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது .

harassment

அகமதாபாத்தில் நிலேஷ் என்ற 75 வயது முதியவர் ,திடீரென விபத்தில் தந்தையை இழந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு தாயையும் ,அவரது 15 வயது மகளையும் படிக்க வைப்பதாக கூறி கிராமத்திலிருந்து தன் வீட்டிற்கு மூன்றாண்டுக்கு முன் கூட்டி வந்தார் .
கூட்டி வந்த நாள் முதல் அந்த 15 வயது சிறுமியை அந்த நிலேஷ் என்ற 75 வயது முதியவர் பலாத்காரம் செய்து வந்துள்ளார் .தந்தையின் இந்த செயல் தெரிந்த 45 வயது அவரின் மகன் முகேஷும் களத்தில் குதித்தார் .தானும் தன் பங்குக்கு அந்த சிறுமியை தினமும் பலாத்காரம் செய்து வந்தார் .

pregnant

இப்படி தந்தையும் ,மகனும் மாறிமாறி கற்பழித்ததில் அப்பெண் கர்ப்பமானார் ,அப்போது மாத்திரைகள் கொடுத்து அந்த பெண்ணின் கர்ப்பம் கலைக்கபப்ட்டது .அவரது தாயாரிடம் இது பற்றி கூறியபோது  புற்று நோயாளியான அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை .

police

சில மாதங்களுக்கு முன் அவரின் தாயார் இறந்த பிறகு அப்பா, மகனின் ஆட்டம் அதிகமானது ,இவர்களின் பாலியல் தொல்லைகள் பொறுக்க முடியாத சிறுமி போலீசில் புகார் செய்தார் .போலீசார் விரைந்து வந்து அப்பா நிலேஷையும் ,மகன் முகேஷையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .