குடும்பத்துடன் வரும் கிரிக்கெட் வீரர்கள்: தொந்தரவாக இருப்பதாக பிசிசிஐ விளக்கம்!

 

குடும்பத்துடன் வரும் கிரிக்கெட் வீரர்கள்:  தொந்தரவாக இருப்பதாக பிசிசிஐ விளக்கம்!

கிரிக்கெட் வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் வெளிநாட்டுப் போட்டிகளுக்கு வருவது தொந்தரவாக இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மும்பை: கிரிக்கெட் வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் வெளிநாட்டுப் போட்டிகளுக்கு வருவது தொந்தரவாக இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின் போது,  முதல் 10 நாட்கள் வீரர்களுடன் அவர்களின் மனைவி இருக்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.  ஆனால் வீரர்கள் குடும்பத்துடன் வெளிநாட்டுப் போட்டிகளுக்கு வருவது நடைமுறைச்சிக்கல்களை உண்டாக்குவதாக பிசிசிஐ வருத்தம் தெரிவித்துள்ளது

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ , வீரர்களே அவரவர் குடும்பத்தினருக்கு செலவு செய்வதால் தங்களுக்குச் செலவு இல்லை ஆனால் அவர்களுக்கான பாதுகாப்பு, இடவசதி உள்ளிட்ட மற்ற வகைகளில் தொந்தரவாக இருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலருடன் வெளிநாடுகளுக்கு வந்தால் அவர்களுக்கான ஏற்பாடுகளை  எளிதாகச் செய்து விடுவோம்.  ஆனால் அதிக எண்ணிக்கையில் வரும்போது நடைமுறைச்சிக்கல்களை சமாளிக்க வேண்டி இருக்கிறது. அது தொந்தரவாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் தாங்கள் பணத்தை முன்னிறுத்தவில்லை என்றும், பாதுகாப்பு விவகாரங்களே சவாலாக இருப்பதாகவும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது

முன்னதாக தன்னுடைய மனைவியான அனுஷ்காவை வெளிநாடுகளுக்கு உடன் அழைத்துச் செல்ல விராட் கோலி அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.