குடும்பத்துடன் கடற்கரையில் நேரம் செலவிட்ட தல அஜித்
நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு மீண்டும் ஹெச்.வினோத்துடன் இணைகிறார் நடிகர் அஜித்
சென்னை: நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் கடற்கரையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு மீண்டும் ஹெச்.வினோத்துடன் இணைகிறார் நடிகர் அஜித். இப்படத்தை போனி கபூர், ஜீ ஸ்டூடியோஸூடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் மாதம் தொடங்குகிறது. தற்போது அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலிருந்து புதிய லுக்கிற்கு மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலானது.
Latest Pic Of Thala #Ajith With His Family.
| #Ak60 #Thala60 #NerKondaPaarvai #Viswasam pic.twitter.com/n2N9d9dmCa
— Ajith Network (@AjithNetwork) October 9, 2019
இந்நிலையில் சென்னை திருவான்மியூர் கடற்கரையில் அஜித் மனைவி ஷாலினி மற்றும் மகனுடன் நேரம் செலவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக நடிகர் அஜித் டெல்லியில் உள்ள டாக்டர்.கர்னிசிங் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.