குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

 

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

கஜா புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அமமுக துணை பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: கஜா புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அமமுக துணை பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

கஜா புயல் திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை துவம்சம் செய்துள்ளது.அங்கு மக்கள் மின்சாரம், உணவு, தண்ணீர் இன்றி இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வருகிறார். முதல்வர் பழனிசாமி செவ்வாய் கிழமை பார்வையிட இருக்கிறார்.

இந்நிலையில் புயலுக்கு பின்னான தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், நிவாரண தொகையை உயர்த்தி வழங்கவும் வேண்டும்.

கஜா புயல் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட முதலமைச்சர் பழனிசாமி தயக்கம் காட்டுவது ஏன்? அரசின் நிவாரண முகாம்களில் அத்தியாவசிய வசதிகள் செய்யப்படவில்லை. கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அரசின் ஒத்துழைப்பு சரிவர இல்லை என்றார்.