குடும்பத்தினர் மற்றும் செல்லபிராணிகளுடன் வீட்டுக்குள் நேரத்தை சந்தோஷமாக செலவிடுங்க… நானும் அப்படித்தான் செய்கிறேன்… விஜய் மல்லையாவின் கொரோனா அட்வைஸ்….

 

குடும்பத்தினர் மற்றும் செல்லபிராணிகளுடன் வீட்டுக்குள் நேரத்தை சந்தோஷமாக செலவிடுங்க… நானும் அப்படித்தான் செய்கிறேன்… விஜய் மல்லையாவின் கொரோனா அட்வைஸ்….

குடும்பம் மற்றும் செல்லபிராணிகளுடன் வீட்டு நேரத்தை சந்தோஷமாக செலவிடுங்க நானும் அப்படித்தான் செய்கிறேன் என பொதுமக்களுக்கு வங்கிகளில் கடனை வாங்கி விட்டு தப்பியோடிய விஜய் மல்லையா கொரோனா அட்வைஸ் செய்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கத்தை அறிவித்துள்ளது. மக்கள் வீட்டை வெளியே வர வேண்டாம், சமூக விலகலை கடைப்பிடியுங்கள் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக இந்திய வங்கிககளில் கடனை வாங்கி விட்டு கட்டாமல் வெளிநாட்டு தப்பியோடிய விஜய் மல்லையாவும் தன் பங்குக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக அட்வைஸ் செய்துள்ளார்.

மகிழ்ச்சியான  குடும்பம்

விஜய் மல்லையா தனது டிவிட்டரில், பாதுகாப்பாக இருப்பது மற்றும் சமூக விலகலை பராமரிப்பது முக்கியம். வீட்டிலேயே இருந்து மற்றும் குடும்பத்தினர் மற்றும் செல்ல பிராணிகளுடன் குடும்ப நேரத்தை செலவிடுவதன் மூலம் அதனை திறம்பட அடைய முடியும். நானும் அப்படித்தான் செய்கிறேன். நம் அனைவருக்கும் துணிச்சலான உணர்வு இருக்கிறது.

விஜய் மல்லையா தனது மகனுடன் கிரிக்கெட் அரங்கில்

ஆனால், கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு சவால் விடுவது தகுதியானது அல்ல இது கார்கில் அல்லது புல்வாமா அல்ல. நாடு முழுவதையும் முடக்கி சிந்திக்க முடியாததை இந்திய அரசு செய்துள்ளது.  நாங்கள் அதை மதிக்கிறோம். என்னுடைய அனைத்து நிறுவனங்களும் செயல்பாட்டை நிறுத்தி விட்டன. அனைத்து உற்பத்தியும் நிறுத்தப்பட்டன.  ஆயினும் நாங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பவில்லை. அரசாங்கம் உதவ  வேண்டும். என பதிவு செய்து இருந்தார்.