குடும்பத்தகராறில் பைக்கை கொளுத்திய இளைஞர்..!

 

குடும்பத்தகராறில் பைக்கை கொளுத்திய இளைஞர்..!

மனைவியின் மீதான கோபத்தினால் குடி போதையில் இருக்கும் வேலுமயில் தனது பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார்.

குடி போதையால் அழிந்த குடும்பங்கள் பல. மது நாட்டிற்கும் வீட்டுக்கும் கேடென்று எவ்வளவு தான் எடுத்துச் சொன்னாலும் சந்தோஷம், சோகம், துக்கம், சண்டை என என்ன நடந்தாலும் குடிப்பது மாற்ற முடியாத ஒன்றாக மாறிவிட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், தாமோதர் நகரில் வசித்து வரும் வேலுமயில், தனது மனைவியுடன் வசித்து வந்தார். பிளம்மிங் வேலை பார்க்கும் இவர், வீட்டிற்கு வரும் போது அதிகமாகக் குடித்து விட்டுச் சென்றிருக்கிறார். அதனால்,  அவருக்கும் அவர் மனைவிக்கும் வாக்கு வாதம் நடந்துள்ளது. மனைவியின் மீதான கோபத்தினால் குடி போதையில் இருக்கும் வேலுமயில் தனது பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார்.

Bike burns

வீட்டிலிருந்து சற்று தொலைவில் சென்றவுடன், அவர் திடீரென பைக்கை நடுரோட்டில் நிறுத்தியுள்ளார். குடிபோதையில் இருக்கும் அவர் நிலை தடுமாறி, நடுரோட்டில் நிற்கும் அவரது பைக்கை அவரே தீயிட்டுக் கொளுத்தியுள்ளார். அப்போது, அருகிலிருந்தவர்கள் அவர் ஏன் இவ்வாறு செய்கிறார் என்ற குழப்பத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர், யாரும் அவரை தடுக்க வில்லை. 

Velu mayil

பைக்கை கொளுத்திய பிறகு வேலுமயில், அங்கிருந்து கிளம்பியுள்ளார். ஒன்றும் புரியாத மக்கள், நடுரோட்டில் எரிந்து கொண்டிருந்த பைக்கை அவர் போன பின்பு, மளமளவென்று எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைத்துள்ளனர். இதனையடுத்து, அங்கு வந்த தென்பாகம் காவல்துறையினர் நடுரோட்டில் இருந்த வாகனத்தை அங்கிருந்து விலக்கிவிட்டு, வேலுமயிலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.