குடி போதையில் சாலையில் தள்ளாடிய பிரபல நடிகர் சக்தி: அதிர்ச்சியில் திரையுலகம்!

 

குடி போதையில் சாலையில் தள்ளாடிய பிரபல நடிகர் சக்தி: அதிர்ச்சியில் திரையுலகம்!

சென்னை சூளைமேட்டில பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகனும் நடிகருமான சக்தி குடி போதையில் காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: சென்னை சூளைமேட்டில பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகனும் நடிகருமான சக்தி குடி போதையில் காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி. நடிகரான இவர் 11 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். 

இந்நிலையில், சென்னை சூளைமேட்டில் பட்டப்பகலில் நண்பருடன் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு அவரது காரை அதிவேகமாக ஓட்டிச்சென்று, இளங்கோவடிகள் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த மாருதி ஆல்டோ காரில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். ஆனால், அவரது காரை அங்குள்ள இளைஞர்கள் சிலர் விரட்டி பிடித்தனர். 

sakthi

அப்போது தான், காரில் இருப்பது நடிகர் சக்தி என விரட்டிப் பிடித்தவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், சக்தி அளவில்லா குடி போதையில் இருந்ததனால் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

sakthi

அதன்பின், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர் வந்த காரிலேயே ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின், போதையில் கார் ஓட்டியது, அதிவேகத்தில் வாகனம் ஓட்டி விபத்தை உண்டாக்கியது ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சக்தியை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

கமல் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ முதல் சீசனில் பங்கேற்று ‘ட்ரிகர்’ சக்தி என நெட்டிசன்கள் மத்தியில் பெயர்பெற்ற சக்தி, இந்த சம்பவத்தையடுத்து தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளார்.