குடி போதையில் கார் ஓட்டிவந்த  டிவி நடிகை -கார் மோதி இரு பெண்கள் காயம் ..நடிகை மாயம் 

 

குடி போதையில் கார் ஓட்டிவந்த  டிவி நடிகை  -கார் மோதி இரு பெண்கள் காயம் ..நடிகை மாயம் 

திங்களன்று கேரளாவில் பப்பனம்கோடு-மலையன்கீஷு சாலையில் பூஜிகுன்னு சந்தி பகுதியில் பிரபல தொலைக்காட்சி நடிகை சித்ரலேகா குடிபோதையில் கார் ஓட்டி வந்தார். அப்போது அவரின் கார் மோதி ஸ்கூட்டரில் வந்த இரு பெண்கள் காயமடைந்தனர்.

திங்களன்று கேரளாவில் பப்பனம்கோடு-மலையன்கீஷு சாலையில் பூஜிகுன்னு சந்தி பகுதியில் பிரபல தொலைக்காட்சி நடிகை சித்ரலேகா குடிபோதையில் கார் ஓட்டி வந்தார். அப்போது அவரின் கார் மோதி ஸ்கூட்டரில் வந்த இரு பெண்கள் காயமடைந்தனர்.  காயமடைந்த பெண்கள் வீரனாகவ் பகுதியை சேர்ந்த ஷியாமா மோகன் மற்றும் அர்ச்சனா ஆகியோர் அத்துகல் பொங்கலாவுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது நடிகையின் கார் பயங்கர வேகமாக வந்து மோதியதால் கடுமையாக காயமடைந்தனர். இதனால் பயந்த நடிகை சித்ரலேகா காரோடு அந்த பகுதியிலிருந்து தப்பித்து ஓடிவிட்டார். ஆனால் திருவிழாவிற்கு சென்ற பொதுமக்கள் தகவல் கேள்விப்பட்டு காரை தடுத்து நிறுத்தினர். 

chitralekha

பிறகு அவர்களிருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். நடிகை சித்ரலேகா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து   விசாரணைக்கு நேமம் காவல்நிலையம் அழைத்து சென்றனர் .