குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரியில் பேரணி! 

 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரியில் பேரணி! 

புதுச்சேரியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தலைமையில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. 

புதுச்சேரியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தலைமையில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. 

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து பல்வேறு மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு, மம்தா பேனர்ஜி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பேரணி

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி ஏ.எப்.டி மைதானத்தில் இருந்து 2,000க்கும் மேற்பட்டோர் தலைமை தபால் நிலையம் நோக்கி பேரணியாக  சென்றனர். திமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சிகள், இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பேரணியில் பங்கேற்றனர்.