குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

 

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து சென்னை லொயோலா கல்லூரி, நியூ கல்லூரி மற்றும் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன் தினம் டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பல மாணவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்குப் பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ttn

இதனைத் தொடர்ந்து, டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து சென்னை லொயோலா கல்லூரி, நியூ கல்லூரி மற்றும் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ttn

அதே போலக் குடியுரிமை சட்டத்தைத் திரும்பப்பெறக்கோரி மதுரை மற்றும் கோவையிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்களும் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த மாணவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.