குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறுக ! விருது அறிவித்த மத்திய அரசுக்கே எழுத்தாளர் கடிதம் !

 

குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறுக ! விருது அறிவித்த மத்திய அரசுக்கே எழுத்தாளர் கடிதம் !

எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் எழுதிய ‘சூல்’ என்ற நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருது அறிவித்தது மத்திய அரசு. 

சூல் என்ற நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சோ. தர்மன் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தனது முதல் கையெழுத்தை பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்தார். தமிழகத்தில் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான சோ.தர்மன் எனப் புனைப்பெயர் கொண்ட சோ. தர்மராஜ் அவர்களுக்கு நேற்று சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டது.

ttn

கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளர்களின் முக்கியமானவராக கருதப்படும் எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் எழுதிய ‘சூல்’ என்ற நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருது அறிவித்தது மத்திய அரசு. 

ttn

இதையடுத்த எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களை சந்தித்து தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய குடியுரிமை சட்டத்திற்கு தமிழக அரசு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என எழுத்தாளர்கள், படைப்பாளிகள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை மனு தயாரித்துள்ளனர். இந்த மனுவுக்கு ஆதரவாக தனது முதல் கையெழுத்தை பதிவிட்டார் சோ.தர்மன்