குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் ! கிரிக்கெட் ஆட பாதுகாப்பிருக்காது என பாக். வீரர் கருத்து !

 

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் ! கிரிக்கெட் ஆட பாதுகாப்பிருக்காது என பாக். வீரர் கருத்து !

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் கிரிக்கெட் ஆடுவது பாதுகாப்பாக இருக்காது என தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவித் மியான்தத். மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த கருத்தை அவர் இணையதளத்தில் நேரலையில் தெரிவித்துள்ளார். “பாகிஸ்தான் சார்பாக நான் பேசுகிறேன், இந்தியாவுடன் அனைத்து விளையாட்டு உறவுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும்” எனக் கூறியிருந்தார். 

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் கிரிக்கெட் ஆடுவது பாதுகாப்பாக இருக்காது என தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவித் மியான்தத். மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த கருத்தை அவர் இணையதளத்தில் நேரலையில் தெரிவித்துள்ளார். “பாகிஸ்தான் சார்பாக நான் பேசுகிறேன், இந்தியாவுடன் அனைத்து விளையாட்டு உறவுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும்” எனக் கூறியிருந்தார். 

 

பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவித் மியான்தத்தின் இந்த கருத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான கராச்சி டெஸ்டில் பாகிஸ்தான் 263 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தத் தொடரை பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. 2009ஆம் ஆண்டு, இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அவர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அதன் பின்னர் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவதை வெளிநாட்டு அணிகள் தவிர்த்துவந்தன. இந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி அங்கு தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.