குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் மனுத்தாக்கல் !

 

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் மனுத்தாக்கல் !

காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் ஏற்கனவே உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டங்கள் நடத்தினர். அதில் பல பேருந்துகளில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

ttn

இந்த போராட்டத்தினால், மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதில் பல மாணவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து அலிகார் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீதும் காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால், டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

ttn

மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்குப் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு, திமுக தலைவர் முக ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் ஏற்கனவே உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில், மக்கள் நீதி மய்யமும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.