குடியிருப்புக்குள் புகுந்த முரட்டு கரடிகள்… உணவுக்காக ஆக்ரோஷமாக சண்டை போட்டதால் பொது மக்கள் அதிர்ச்சி!

 

குடியிருப்புக்குள் புகுந்த முரட்டு கரடிகள்… உணவுக்காக ஆக்ரோஷமாக சண்டை போட்டதால் பொது மக்கள் அதிர்ச்சி!

இது போன்ற சம்பவங்கள் உலகம் முழுக்கவே நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் இன்னொரு உதாரணம்!

இயற்கை வளங்களை அழித்தால் என்னாகும் என்பதற்கு உலகம் முழுக்க ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம்.கோவை,தருமபுரி தொடங்கி நீர் நிலைகளைத் தேடியும்,உணவுக்காகவும் ஊருக்குள் மிருகங்கள் வருவது அடிக்கடி நடப்பதை நாமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

elephant

இது போன்ற சம்பவங்கள் உலகம் முழுக்கவே நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் இன்னொரு உதாரணம்! அமெரிக்காவிலுள்ள  ஃபிராங்க்போர்ட் என்ற ஊரில் உணவு தேடி ஒரு குடியிருப்பு பகுதிக்குள் இரண்டு முரட்டு கரடிகள் நுழைந்திருக்கிறது.

வந்த இடத்தில் கிடைத்த உணவை பங்கு போட்டுக்கொள்வதில் பிரச்சினையாகி இரண்டு கரடிகளும் ஆக்ரோஷமாக சண்டை போட்டுக்கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

elephant

சம்பவம் நடந்தது பகல் நேரத்தில் என்பதால் பொது மக்கள் யாருக்கும் ஆபத்து இல்லை என்பது ஆறுதலான செய்தி.அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே இப்படி என்றால்…என்னத்த சொல்றது!?