குடியரசு தின சலுகை: பி.எஸ்.என்.எல் ரூ.1999 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானின் வேலிடிட்டி அதிகரிப்பு

 

குடியரசு தின சலுகை: பி.எஸ்.என்.எல் ரூ.1999 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானின் வேலிடிட்டி அதிகரிப்பு

குடியரசு தின சலுகையாக பி.எஸ்.என்.எல் ரூ.1999 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானின் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: குடியரசு தின சலுகையாக பி.எஸ்.என்.எல் ரூ.1999 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானின் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வருகிற 26-ஆம் தேதி 71-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் குடியரசு தினத்தை முன்னிட்டு டெலிகாம் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அளிக்க முடிவு செய்துள்ளன. இதன் எதிரொலியாக தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனம் குடியரசு தின சலுகையாக ரூ.1999 பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானின் வேலிடிட்டியை அதிகரித்துள்ளது.

முன்னதாக இந்த ரீசார்ஜ் பிளானின் வேலிடிட்டி 365 நாட்களாக இருந்தது. தற்போது மேலும் 71 நாட்கள் கூடுதலாக வழங்கப்பட உள்ளது. ஜனவரி 26 முதல் பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் இந்த பிரீபெய்டு ரீசார்ஜ் பிளானை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 436 நாட்கள் வேலிடிட்டி அளிக்கப்படும் என்று பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது. மேலும் இந்த பிளானில் அதிவேக இன்டர்நெட்டும், அன்லிமிடெட் வாய்ஸ்கால் மற்றும் எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.