குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாளர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிப்பு

 

குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாளர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிப்பு

குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாளர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாளர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாளர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் உள்ள துப்புரவுத் தொழிலாளியின் உறவினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் ராஷ்டிரபதி பவனில் ஊழியர் இல்லை என்றாலும் அந்த வளாகத்தில் தான் அவர் வசிக்கிறார்.

president house

இந்நிலையில், ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் உள்ள அனைத்து 125 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரே பகுதிக்குள் 25 வீடுகள் கடுமையாக தனிமையில் வைக்கப்பட்டுள்ளன. வளாகத்தில் உள்ள மற்ற வீடுகளில் வசிப்பவர்கள் மளிகைப் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியேறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களும் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.