குடியரசுத் தலைவர் கையில் விருதை வாங்கினார் அமிதாப் பச்சன்!

 

குடியரசுத் தலைவர் கையில் விருதை வாங்கினார் அமிதாப் பச்சன்!

டெல்லியில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார்.

திரைப்படத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டாா். அதன்படி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Amitabh Bachchan

தமிழில் பாரம், ஹிந்தியில் அந்தாதூன் ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாக தேர்வாகின. .இந்த விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். 

திரைத்துறையில் உயரிய விருது பெறுவது பெருமையாக இருப்பதாக நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்தார்.