குடிமகன்கள் கவனத்திற்கு.. புதுச்சேரியில் பிப். 8 ஆம் தேதி மதுபான கடைகள் அடைப்பு !

 

குடிமகன்கள் கவனத்திற்கு.. புதுச்சேரியில் பிப். 8 ஆம் தேதி மதுபான கடைகள் அடைப்பு !

கடைகள் அடைக்க படுவதால் பிளாக்கில் மது விற்பனை ஆகாமல் தடுக்க காவல்துறையினர் கண்காணிக்கும் படி உத்தரவிட்டார். 

வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி வள்ளலார் நினைவு தினத்தை ஒட்டி சென்னையில் உள்ள அனைத்து மதுபான கடைகள், டாஸ்மாக், பார்கள், கிளப்கள், அரசு உரிமம் பெற்ற கடைகள் என அனைத்தும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி தெரிவித்தார். மேலும், கடைகள் அடைக்க படுவதால் பிளாக்கில் மது விற்பனை ஆகாமல் தடுக்க காவல்துறையினர் கண்காணிக்கும் படி உத்தரவிட்டார். 

ttn

இதனைத்தொடர்ந்து புதுச்சேரியிலும் வள்ளலார் நினைவு தினத்தையொட்டி மதுபான அடைகள் மூடப்பட உள்ளது. இது குறித்து கலால் துறை துணை ஆணையர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், வள்ளலார் நினைவு தினத்தையொட்டி வரும் 8 ஆம் தேதி அனைத்து வகையான மதுபான கடைகளும், மது அருந்த அனுமதிக்கும் ஹோட்டல்களும் மூடப்பட வேண்டும் என்றும் அன்று மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.