குடிமகன்கள் கவனத்திற்கு..!: டாஸ்மாக் பார்களில் எலிக்கறி விற்பனை? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!
எலிகளை கொண்டு சென்று டாஸ்மாக் கடைகளில் கொடுத்து விடுவேன் என்றும் அவர்கள் அதை முயல்கறி என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை: டாஸ்மாக் பார்களில் முயல்கறி என்று எலிக்கறி சப்ளை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆயின்குடியில் ஒருவர் எலிகளைப் பிடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அவரிடம் அது குறித்து விசாரித்த போது, எலிகளை கொண்டு சென்று டாஸ்மாக் கடைகளில் கொடுத்து விடுவேன் என்றும் அவர்கள் அதை முயல்கறி என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இருப்பினும் டாஸ்மாக் கடைகளுக்கு எலிக்கறிகளை சப்ளை செய்வதாகக் கூறிய அந்த இளைஞரோ அதைத் தவறு என்று நினைக்காமல் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்துள்ளார். இதனால் அவர் விளையாட்டாக இப்படி சொல்கிறாரா அல்லது உண்மையில் எலிக்கறி விற்கப்படுகிறதா என்று தெரியாமல் அப்பகுதிவாசிகள் குழப்பி போயுள்ளனர்.
எலிகளினால் பிளேக் போன்ற கொடிய நோய்கள் வரும் அபாயம் உள்ள நிலையில் இது குறித்து உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.