குடிமகன்களுக்கு ஓர் முக்கிய செய்தி… நாளை டாஸ்மாக் செயல்படாது!
Mar 21, 2020, 10:38 IST1584767320000
மக்கள் கொரோனா வைரஸ் அச்சத்தில் இருந்ததால் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் பேசினார்.
மக்கள் கொரோனா வைரஸ் அச்சத்தில் இருந்ததால் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் பேசினார். அதில்,கொரோனா மக்களை தாக்காது என்று எண்ண வேண்டாம். நாம் மிக்க ஆபத்தான நிலையில் இருக்கிறோம். வரும் 22ஆம் தேதி சுய ஊரடங்கை கடைப்பிடிப்போம் என்று கூறினார். அதற்கு பல தரப்பு மக்களும் வரவேற்பு அளித்தனர்.
அதே போல தமிழகத்திலும் காய்கறி கடைகள். பால் விநியோகம்,அரசு பேருந்துகள், மெட்ரோ ரயில் என ஏதும் செயல்படாது என்று தெரிவிக்கபட்டது. இந்திய மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்ற உள்ள நிலையில் தமிழக முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை ஒரு நாள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.