குடிபோதையில் வேகமாக கார் ஓட்டினாரா காயத்ரி ரகுராம்? உண்மை நிலவரம் என்ன?

 

குடிபோதையில் வேகமாக கார் ஓட்டினாரா காயத்ரி ரகுராம்? உண்மை நிலவரம் என்ன?

பிக் பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய விவகாரம் குறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய விவகாரம் குறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது.

நடன இயக்குநரான காயத்ரி ரகுராம், மத்தியில் ஆளும் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு குடிபோதையில் வேகமாக கார் ஓட்டிச் சென்ற காயத்ரி ரகுராம் போலீசாரிடம் பிடிபட்டதாக செய்திகள் வெளியாகின.  

சென்னை அடையார் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காயத்ரி ரகுராம் மதுபோதையில் கார் ஓட்டியதும், அவரிடம் லைசன்ஸ் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை என்பதை தெரியவந்தது. குடிபோதையில் கார் ஓட்டியது, லைசன்ஸ் இல்லாததற்கு ரூ.3,500 அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அது வழக்கமான சோதனை தான், நான் மது அருந்தவில்லை. என்னுடைய லைசன்ஸ் வேறு ஹேண்ட்பேகில் இருந்ததால் காவலர் ஒருவர் என்னுடன் வந்தார். அவர் என் அப்பா பற்றி பேசினார். என்னுடைய ரசிகரும் கூட, அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், போலீசாருடன் எந்த சண்டையும் இல்லை. மது அருந்திருந்தால் என்னை கார் ஓட்ட அனுமதித்திருக்க மாட்டார்கள். எதற்காக என்னை பற்றி பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என தெரியவில்லை. என்னைப் பற்றி ஏதாவது செய்தி வெளியிடவேண்டுமென்றால் என்னிடமும் அதுபற்றிக் கேட்டுவிட்டு வெளியிடுங்கள் என்று கூறியுள்ளார்.