குடிபோதையில் வெறிச்செயல்: நாயை குத்தி கொன்ற நபர் கைது!

 

குடிபோதையில் வெறிச்செயல்: நாயை குத்தி கொன்ற நபர் கைது!

குடிபோதையில் நாயை கத்தியால் குத்திக் கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: குடிபோதையில் நாயை குத்திக் கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலை அருகே சென்ற குடிபோதையில் ராஜா என்பவர் நடந்து சென்றுள்ளார், அப்போது அப்பகுதியில், இருந்த நாய் ஒன்று ராஜாவை பார்த்து குரைத்துள்ளது. இதனால் போதையில் இருந்த அந்த நபர் நாயை விரட்டியுள்ளார். பயத்தில் அங்குள்ள டெய்லர் கடைக்குள் நாய் சென்றுள்ள  நிலையில் ராஜா  கடைக்குள் இருந்த கத்தரிக்கோலை எடுத்து  நாயை  கழுத்தில் குத்தியுள்ளார்.

raja

இதனால் துடிதுடித்த நாய் 4 மணி நேரம் போராடி உயிரிழந்தது. இதனை நேரில் பார்த்த டெய்லர் கொடுத்த தகவலின் பேரில் புளூகிராஸ் அமைப்பினர் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில், ராஜா மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ராஜாவை கைது செய்து  428, 429, 478, 503 IPC and 11 of PCA உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைச் சிறையில்  அடைத்தது குறிப்பிடத்தக்கது.