குடிபோதையில் இரு மகள்களையும் கொலை செய்த கொடூரம்: உண்மை நிலவரம் என்ன?

 

குடிபோதையில் இரு மகள்களையும் கொலை செய்த கொடூரம்: உண்மை நிலவரம் என்ன?

குடிபோதையில், 2 பெண் பிள்ளைகளை தந்தையே தலையணையால் அழுத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : குடிபோதையில், 2 பெண் பிள்ளைகளை தந்தையே தலையணையால் அழுத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே மசக்காளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் – செல்வராணி தம்பதிக்கு, ஹேமாவர்ஷினி, ஸ்ரீஜா என இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செல்வராணி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு சிறுமிகளையும் பத்மநாபனின் தாயார் பிரேமா கவனித்து வந்துள்ளார். 

இந்நிலையில்  பத்மநாபன் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளார். தினமும் மதுபோதையில் மனைவி செல்வராணியிடம் தகராறு செய்ததோடு அவரைத் தாக்கவும் செய்துள்ளார். ஒருகட்டத்தில் பொறுமை காக்க முடியாத செல்வராணி பத்மநாபன் குறித்து போலீசிடமும் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துதுள்ளனர்.

ஆனால் பத்பநாபன் நடவடிக்கையில் மாற்றம் இல்லாததால் செல்வராணி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இரண்டு மகள்கள் மட்டும் தந்தையுடனேயே இருந்துள்ளனர். இந்நிலையில்தான் வழக்கம்போல் இரவு உறங்கச் சென்ற இரண்டு மகள்களும் காலையில் சடலமாகக் கிடந்துள்ளனர். பேத்திகள் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து பத்மநாபனின் தாயார் பிரேமா கதறி அழுதுள்ளார். மதுபோதைக்கு அடிமையான பத்மநாபன் மனைவி மீதுள்ள கோபத்தில் இரண்டு மகள்களையும் தலையணையால் அழுத்திக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான பத்மநாபனைத் தேடி வருகின்றனர். பெற்றெடுத்த தந்தையே குடிபோதையில் மகள்களைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.