குடிநீர் எடுக்க சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம் : 13 வயது சிறுமி பரிதாப பலி!

 

குடிநீர் எடுக்க சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம் : 13 வயது சிறுமி பரிதாப பலி!

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை . இதனால் பதறிபோன அச்சிறுமியின் பெற்றோர் சிறுமியை பல இடங்களும் தேடியுள்ளனர்.  

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ளது நொடியூர் கிராமம். இப்பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் நேற்றுக்காலை குடிநீர் எடுத்து வர சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை . இதனால் பதறிபோன அச்சிறுமியின் பெற்றோர் சிறுமியை பல இடங்களும் தேடியுள்ளனர்.  

tt

இறுதியில் சிறுமி அங்குள்ள தைல மரக்காட்டில் உடலில் காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்துள்ளார்.  இதையடுத்து சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

dd

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்றிரவு பரிதாபமாக பலியானார். இந்த விவகாரத்தில் சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் போலீசார் நான்கு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.