குடித்த மகன் -வெடித்த தாய் -துடிக்க கொன்றார் -‘இன்ஜினீயர் மகனை இஞ்சி போல துண்டு துண்டாக்கிய அம்மா… 

 

குடித்த மகன் -வெடித்த தாய் -துடிக்க கொன்றார் -‘இன்ஜினீயர் மகனை இஞ்சி போல துண்டு துண்டாக்கிய அம்மா… 

தமிழ்நாட்டில் கம்பம் பகுதியில் விக்னேஸ்வரன் என்ற 25 வயது என்ஜினீயர் தினமும் குடித்துவிட்டு வந்து அவரது அம்மாவிடம் தகராறு செய்துள்ளார் ,இதனால் மனம் விரக்தியடைந்த அவரது தாய் மகனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுவிட்டு, அதற்கு பிறகும் ஆத்திரம் அடங்காமல் அவரை துண்டு துண்டாக்கினார்

தமிழ்நாட்டில் நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், ஒரு இன்ஜினீயர் மகனை அவரது தாயார் அவரை விஷம் வைத்து கொன்றபிறகும் ஆத்திரம் அடங்காமல் அவரை துண்டுதுண்டாக்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .

தமிழ்நாட்டில் கம்பம் பகுதியில் விக்னேஸ்வரன் என்ற 25 வயது என்ஜினீயர் தினமும் குடித்துவிட்டு வந்து அவரது அம்மாவிடம் தகராறு செய்துள்ளார் ,இதனால் மனம் விரக்தியடைந்த அவரது தாய் மகனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுவிட்டு, அதற்கு பிறகும் ஆத்திரம் அடங்காமல் அவரை துண்டு துண்டாக்கினார். அவரின் துண்டாக்கிய உடல் பாகங்களை அந்த தாய் ஒரு கோணிப்பையில் வைத்து ஊரின் வெவ்வேறு பகுதிகளில் வீசி சென்றுள்ளார் . 

இது பற்றி தகவலறிந்த போலீஸ் விசாரணையில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும்  ஒரு கோணிப் பையில் எதையோ கொண்டு வந்து கொட்டியதாக பொதுமக்கள் கூறினர் என்று போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு பாதிக்கப்பட்டவரின் தாயிடம் விசாரித்தனர், அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர். தனது மகனின் போதையாலும்    அவர் செய்த  முரட்டுத்தனத்தாலும் வெறுப்படைந்து அவர் தலையை துண்டாக்கி, உடலை கூறு போட்டதாக அந்த அந்த தாய் கூறினார்
மேலும் அவர் முன்பு தான் பணிபுரிந்த இடத்திலும்  ஒழுக்கற்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டதாகவும்  அவர் சில திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும்  மகனின் உடலை அப்புறப்படுத்த அந்த பெண்ணுக்கு யார் உதவினார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.