குடித்த நபரை, கடித்த பாம்பு துடித்து செத்தது -பாம்பை பாடாய் படுத்திய “Snake பாபு”..

 

குடித்த நபரை, கடித்த பாம்பு துடித்து செத்தது -பாம்பை பாடாய் படுத்திய “Snake பாபு”..

“பாம்பு கடிச்சி செத்தவன விட பாம்ப  கண்டு பயந்து செத்தவன்தான் அதிகம்” னு ஊர்ப்பக்கம் சொல்வாங்க..அந்தளவுக்கு பாம்பின் விஷத்தின் மேல் மக்களுக்கு ஒரு பயம் உண்டு .ஆனால் இதற்கு விதிவிலக்காக ஒரு நபர் பாம்பு பலமுறை கடித்தும் அவருக்கு ஒன்றுமே   ஆகாமல் பாம்புக்கு tired ஆகி சுருண்டு விழுந்து இறந்து போனது கண்டு மக்கள் அந்த நபரை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர் .

“பாம்பு கடிச்சி செத்தவன விட பாம்ப  கண்டு பயந்து செத்தவன்தான் அதிகம்” னு ஊர்ப்பக்கம் சொல்வாங்க..அந்தளவுக்கு பாம்பின் விஷத்தின் மேல் மக்களுக்கு ஒரு பயம் உண்டு .ஆனால் இதற்கு விதிவிலக்காக ஒரு நபர் பாம்பு பலமுறை கடித்தும் அவருக்கு ஒன்றுமே   ஆகாமல் பாம்புக்கு tired ஆகி சுருண்டு விழுந்து இறந்து போனது கண்டு மக்கள் அந்த நபரை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர் .
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அந்த நபர் குடிபோதையில் ஒரு வெட்ட வெளியில் படுத்திருந்தார் ,அப்போது அவர் அருகில் ஒரு கருநாக பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியது .சத்தம் கேட்டு குடிகார ஆசாமி போதையிலிருந்து எழுந்து பாம்பை கண்டு பயப்படாமல் அதனோடு விளையாடினார் .ஆனால் அந்த பாம்பு அவரை பலமுறை கொத்தியது ,அவர் திரும்ப பாம்போடு மோதினார் ,மறுபடியும் பாம்பு அவரை கொத்தியது ,அப்போதும் அவர் பயப்படாமல், கத்தாமல் பாம்பை தனது தோள்  மீது தூக்கி போட்டுக்கொண்டு சுத்தினார் .மறுபடியும் பாம்பு அவரை கொத்தியது .

எத்தனை முறை பாம்பு அவரை கொத்தினாலும் அந்த குடிகார நபர் அசராமல் இருந்தார் ,கடைசியில் பாம்பு களைப்படைந்து உயிரை விட்டது ,இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது .”கொத்தி கொத்தி பார்த்தீக ..களைப்பாகி போனீங்க “ன்னு பாட்டு பாடிக்கொண்டே அந்த நபர் பாம்பு செத்துக்கிடப்பதை கண்டு சிரித்தார் .ஆனால் அருகிலிருந்த பொதுமக்கள்தான் அவரின் உயிருக்கு ஏதாவது ஆகிவிடப்போகிறதென்று பயந்து  அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .