குடிக்கும்போது செல்போன் பயன்படுத்தாதீங்க… சர்ச்சையில் சிக்கிய காவல்துறையினரின் அறிவிப்பு பலகை

 

குடிக்கும்போது செல்போன் பயன்படுத்தாதீங்க… சர்ச்சையில் சிக்கிய காவல்துறையினரின் அறிவிப்பு பலகை

ஜம்மு- காஷ்மீரில்  வித்தியாசமான வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகை  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 ஜம்மு- காஷ்மீரில்  வித்தியாசமான வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகை  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முகல் சாலையில் போக்குவரத்து காவல் துறையினர் அமைத்துள்ள அந்த பலகையில், குடிக்கும்போது உங்களது மொபைல் போனைப் பயன்படுத்தாதீர்கள்  என எழுதப்பட்டிருக்கிறது. வாகனம் ஓட்டும்போது மொபைலை பயன்படுத்தாதீர்கள் என்பதற்கு பதில் குடிக்கும்போது மொபைலை பயன்படுத்தாதீர்கள் என தவறாக அச்சிடப்பட்டிருந்தது. Driving என்பதற்குப் பதிலாக Drinking என குறிப்பிடப்பட்டிருந்ததற்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்ட சதிச்செயல் என்றும், இந்த புகைப்படம் போட்டோஷாப் மூலம் தவறாக எடிட்  செய்யப்பட்டது என்றும் ஜம்மு காவல்துறை தெரிவித்துள்ளது.