குஜராத் தப்லீக் ஜமாத் அமைப்பினர் 39 பேருக்கு கொரோனா பரிசோதனை
Apr 9, 2020, 13:55 IST1586420721000
கீழ்ப்பாக்கத்தில் தப்லீக் ஜமாத் அமைப்பினர் 39 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
சென்னை: கீழ்ப்பாக்கத்தில் தப்லீக் ஜமாத் அமைப்பினர் 39 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
கடந்த 9-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் இருந்து தப்லீக் ஜமாத் அமைப்பினர் சென்னைக்கு வந்து மதப்பிரச்சாரம் செய்தனர். அந்த மத குருமார்கள் பேசின் பிரிட்ஜ் அருகே உள்ள ஜமாத்தில் தங்கி மத பிரச்சாரம் செய்து வந்தனர்.
ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் திரும்ப முடியாமல் இருந்தனர். இந்த நிலையில், குஜராத் தப்லீக் ஜமாத் அமைப்பினருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.