குஜராத்ல மட்டுமல்ல, இங்க கும்பகோணத்துலயும் அதே நாய் ஜென்மம்னுதான் சொல்கிறார் இவர்.

 

குஜராத்ல மட்டுமல்ல, இங்க கும்பகோணத்துலயும் அதே நாய் ஜென்மம்னுதான் சொல்கிறார் இவர்.

பெண் வயதுக்கு வருகிற மாதமே அவளது தலை விதியைத் தீர்மானித்து விடுவதாகச் சொல்லும் இவர், அவள் குறிப்பிட்ட மாதங்களில் ருதுவானால் விதவை ஆகிவிடுவாள்,இன்னும் சில மாதங்களில் பிறப்பவள் ஏகப்பட்ட பிள்ளைகளைப் பெறுவாள்,வேறு சில மாதங்களில் பிறப்பவளோ ‘பர புருஷ’ சிந்தனையோடு இருப்பாள்!.அதாவது பாலியல் தொழிலாளி ஆவாள் என்கிறார்.

காஞ்சி சங்கரமடத்தின் பூர்வீகம் கும்பகோணதான்.அவர்கள் காஞ்சி வந்த பிறகும் கும்பகோணத்தில் நிறைய சமயம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்கள்.அப்படி காஞ்சி சங்கர மடத்தின் சார்பாக கும்பகோணத்தில் 1962-ல் துவக்கப்பட்டதுதான் ‘ வேத தர்ம பரிபாலன சபா’! 

2014-க்குப் பிறகு இந்த சபையின் சார்பாக பல வேத விற்பன்னர்களை அழைத்து வந்து இங்கே பிரசங்கங்கள் நடத்துகிறார்கள்.அதில் ஒரு வேதம் கற்ற உபன்யாசி அகமதாபாத்காரர் சொன்ன அதே தகவல்களை நல்ல தமிழில் சொல்கிறார் 
கேளுங்கள்.

பெண் வயதுக்கு வருகிற மாதமே அவளது தலை விதியைத் தீர்மானித்து விடுவதாகச் சொல்லும் இவர், அவள் குறிப்பிட்ட மாதங்களில் ருதுவானால் விதவை ஆகிவிடுவாள்,இன்னும் சில மாதங்களில் பிறப்பவள் ஏகப்பட்ட பிள்ளைகளைப் பெறுவாள்,வேறு சில மாதங்களில் பிறப்பவளோ ‘பர புருஷ’ சிந்தனையோடு இருப்பாள்!.அதாவது பாலியல் தொழிலாளி ஆவாள் என்கிறார்.

அடுத்து மாதவிடாய் பற்றிச் சொல்ல வரும்போதுதான் அகமதாபாத் ஸ்வாமி கிருஷ்ண ப்ரசாத் தேப்ஜியின் அதே கருத்துக்களை கும்பகோணத்தில் கொண்டு வந்து கொட்டுகிறார். மாதவிடாய் தோன்றிய முதல் நாளில் பெண் சண்டாளியாக ( தீண்டத் தகாதவளாக) இருப்பாளாம்.இரண்டாவது நாளில் அவள் பிர்ம்மஹத்தி ( பிராமணனைக் கொலை செய்த பாவம்) மூன்றாம் நாளில் அவள் துணி துவைக்கும் ஜாதியைச் சேர்ந்தவள் ஆகிறாளாம்.நான்காம் நாளில்தான் அவள் ‘ சுந்தை’ ஆகிறாள்.

அப்போது கூட அவள் தேவகாரியம்,பிதுர் காரியம் முதலான பூஜைகளில் பங்கேற்க தகுதியுடையவள் அல்ல,5 வதுநாள் தலைக்கு குளித்த பிறகுதான் அவள் இது போன்ற கர்மங்களில் ஈடுபடலாம் என்கிறார்.

மூன்றாவது வீடியோவில் “அந்தப் பெண் மாதவிடாய் காலத்தில் இந்த நியமங்கள் ஒன்றையும் கடைபிடிக்காமல் வாழ்ந்தாள் அவள் நாயாகத்தான் பிறப்பாள்” என்று குஜராத்காரரை வழி மொழிகிறார்.