குச்சியால் துரத்த முயன்ற இளைஞர்கள் : ஓட விட்டு விரட்டி அடித்த காட்டு யானை.. வைரல் வீடியோ !

 

குச்சியால் துரத்த முயன்ற இளைஞர்கள் : ஓட விட்டு விரட்டி அடித்த காட்டு யானை.. வைரல் வீடியோ !

மக்களின் சத்தத்தினால் மிரண்டு போன அந்த யானை அங்கிருந்து மெதுவாகச் சென்றுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களைச் சேதப்படுத்தி வருகின்றன. அதே போல மயூர்பஞ்ச் என்னும் பகுதியிலும் காட்டு யானை ஒன்று விளைநிலத்தில் புகுந்துள்ளது. அதனை, பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து துரத்தியுள்ளனர். மக்களின் சத்தத்தினால் மிரண்டு போன அந்த யானை அங்கிருந்து மெதுவாகச் சென்றுள்ளது. அப்போது, அங்கிருந்த இளைஞர் ஒருவர் அவர் வைத்திருந்த குச்சியால் அதனை அடித்து விரட்ட முயன்றுள்ளார். 

ttn

இதனால் ஆத்திரமடைந்த அந்த யானை திரும்பி, அந்த இளைஞனை ஓட விட்டு விரட்டியுள்ளது. அதைப் பார்த்துக் கதி கலங்கிய அந்த இளைஞன் அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளான். இந்த வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இனிமேல் காட்டு யானைகள் ஊருக்கு வந்தால், மக்கள் அதனை விரட்ட முயன்று சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் அதிகாரிகளை அழைக்குமாறு ஒடிசா மாநில வனத்துறை மக்களிடம் தெரிவித்துள்ளது.