குக் வித் குடிகாரர் -போதையில் பிணத்தை சமைத்து சாப்பிட்ட கொடுமை … 

 

குக் வித் குடிகாரர் -போதையில் பிணத்தை சமைத்து சாப்பிட்ட கொடுமை … 

உத்திரபிரதேசம் மாநிலம் பிஜினார் பகுதியில் சஞ்சய் என்ற நபர் பெரிய குடிகாரர், அவர் குடித்து விட்டு அந்த பகுதியில் தினமும் எல்லோரிடமும் தகராறு செய்து வீட்டுக்கு லேட்டாக வருவது வழக்கம். திடீரென்று ஒரு நாள் அவர் வீட்டுக்கு சீக்கிரம் வந்து கிட்சனுக்குள் புகுந்து சமைத்து கொண்டிருந்தார்.

உ .பி .பிஜினோர் பகுதியில் சஞ்சய் என்ற நபர் குடிபோதையில் தன்னுடைய தந்தையின் கையை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அங்கே அதிர்ச்சியளித்துள்ளது .
உத்திரபிரதேசம் மாநிலம் பிஜினார் பகுதியில் சஞ்சய் என்ற நபர் பெரிய குடிகாரர், அவர் குடித்து விட்டு அந்த பகுதியில் தினமும் எல்லோரிடமும் தகராறு செய்து வீட்டுக்கு லேட்டாக வருவது வழக்கம். திடீரென்று ஒரு நாள் அவர் வீட்டுக்கு சீக்கிரம் வந்து கிட்சனுக்குள் புகுந்து சமைத்து கொண்டிருந்தார்.

man cook

அப்போது வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்த மனைவிக்கு ஒரே ஆனந்த அதிர்ச்சி, ஏனெனில் தனது கணவர் வீட்டுக்கு சீக்கிரம் வந்ததோடல்லாமல் சமையல் வேறு செய்கிறாரே ஒரு வேலை திருந்திவிட்டாரோ என்று அவர் சமைப்பதை  எட்டிப்பார்த்தவருக்கு அதிர்ச்சி, என்னவென்றால் அவர் சமைத்தது ஒரு மனிதனின் கை. அதைப்பார்த்து  அதிர்ச்சியடைந்து அருகிலுள்ளவர்களை  அவர் கூப்பிட்டு வந்தார், அப்போது அவர்கள் அவரிடம் விசாரித்தபோது அது சமீபத்தில்  இறந்து போன ஒருவருடைய  கை என்றும், அதை சுடுகாட்டிலிருந்து தான் எடுத்து வந்து சமைத்து சாப்பிடுவதாகவும் கூறியதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்பெண் அளித்த புகாரில் போலீசார் இது பற்றி விசாரித்து வருகின்றனர்.