குக்கர் சின்னம் குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும்: உச்சநீதிமன்றம் அதிரடி!

 

குக்கர் சின்னம் குறித்து  தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும்: உச்சநீதிமன்றம் அதிரடி!

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுதில்லி: டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக என்ற தனி கட்சியை துவங்கியுள்ள தினகரனுக்கு, அவர் போட்டியிட்ட முதல் தேர்தலிலையே அபார வெற்றியை தேடித் தந்த சின்னம், குக்கர். இந்த சின்னத்தை தக்கவைக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ec

அந்த வகையில், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட சமயத்தில், அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.ஆனால் உச்சநீதிமன்றத்தில், குக்கர் சின்னம் பொதுவான சின்னம் என்பதால், அச்சின்னத்தை அமமுகவுக்கு நிரந்தரமாக ஒதுக்க முடியாது என்றும் தேர்தல் நேரத்தில் தான் அமமுகவுக்கு எந்த சின்னம் என்று முடிவு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

sc

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்குமாறு உத்தரவிட முடியாது என தெரிவித்துவிட்டது. அதேசமயம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் வழங்கலாமா இல்லையா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் எனவும் கூறியுள்ளது.