‘கீரிதலையன்’ என்று கிண்டல் செய்ததால் உயிர் நண்பனை கொன்ற இளைஞர்: சென்னையில் பயங்கரம்!

 

‘கீரிதலையன்’ என்று கிண்டல் செய்ததால் உயிர் நண்பனை கொன்ற இளைஞர்: சென்னையில் பயங்கரம்!

நண்பர்களான இவர்கள் இருவரும் சேர்ந்து கொத்தனார் வேலை செய்து வந்துள்ளனர்

சென்னை கே.கே நகர் பகுதியில் பிளாட்பார்மில் தங்கி வந்தவர்கள் ராபர்ட் மற்றும் கீரிதலையன். நண்பர்களான இவர்கள் இருவரும் சேர்ந்து கொத்தனார் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ராபர்ட் மற்றும் கீரிதலையன் இருவரும் நேற்றிரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். 

ttn

அப்போது நண்பர்கள் இருவருக்குள்  தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மதுபாட்டிலை உடைத்து ராபர்ட்டை குத்தி கொலைசெய்து விட்டு ஓடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராபர்டின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ttn

இதையடுத்து  தப்பியோடிய கீரிதலையனை நேற்று நள்ளிரவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரிடம்  நடத்திய விசாரணையில், ராபர்ட் கொச்சையான வார்த்தையில்  தன்னை பேசினான். அத்தோடு என் பெயரை கிண்டல் செய்தான். அதனால் ஆத்திரத்தில் கொலை செய்தேன்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.   கீரிதலையன் என்று கிண்டல் செய்ததால் நண்பனை கொலை செய்த  சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.