கிறிஸ்துமஸ் பண்டிகை: திருச்சி- சென்னைக்கு சிறப்பு ரயில்!

 

கிறிஸ்துமஸ் பண்டிகை: திருச்சி- சென்னைக்கு சிறப்பு ரயில்!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூா்-திருச்சிக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூா்-திருச்சிக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பா் 23, 25 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06025) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு திருச்சிராக்கு சென்றடையும். திருச்சியில் இருந்து டிசம்பா் 22, 24 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06026) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

Train

இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பா் 22-ஆம் தேதி இரவு 7 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82631) புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு எா்ணாகுளம் சந்திப்பை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டன” என குறிப்பிட்டுள்ளது.