‘கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்’ : வங்கியில் கொள்ளையடித்த பணத்தை சாலையில் வீசிய முதியவர்!
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், அங்கிருந்த கடையில் காபி குடித்து கொண்டிருந்த முதியவரை கைது செய்தனர்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் அகாடமி வங்கி இயங்கி வருகிறது. அங்கு நேற்று பயங்கர ஆயுதங்களுடன் வந்த முதியவர் ஒருவர் அங்கிருந்தவர்களை மிரட்டி கருவூலத்திலிருந்த பல லட்சம் டாலர்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
பின் அங்கிருந்து மக்கள் கூடும் இடத்திற்கு சென்ற அவர், பல லட்சம் டாலர்களை சாலையில் வீசி அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால் பலரும் பணத்தை போட்டிபோட்டு எடுத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், அங்கிருந்த கடையில் காபி குடித்து கொண்டிருந்த முதியவரை கைது செய்தனர். அவர் பெயர் டேவிட் வேன் ஆலிவர் என்பதும் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடவே கொள்ளையடித்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தெரிந்த பலரும் போலீஸ் விசாரணைக்கு பயந்து வங்கியில் பணத்தை திரும்பத் தந்துள்ளனர். இருப்பினும் பல லட்சம் மதிப்பிலான டாலர்கள் இன்னும் கிடைக்கவில்லையாம்.