கிரேஸி மோகனின் டைமிங் காமெடி!

 

கிரேஸி மோகனின் டைமிங் காமெடி!

சினிமாவில் கிரேஸி மோகன் எழுதிய டைமிங் காமெடி எனப்படும் நகைச்சுவை வசனங்கள் மிகவும் பிரபலம். எத்தனை முறை பார்த்தாலும் அவருடைய நகைச்சுவை காட்‌சிகள் சலிப்பை ஏற்படுத்தாது ‌என்றால் அது மிகையல்ல. 

சினிமாவில் கிரேஸி மோகன் எழுதிய டைமிங் காமெடி எனப்படும் நகைச்சுவை வசனங்கள் மிகவும் பிரபலம். எத்தனை முறை பார்த்தாலும் அவருடைய நகைச்சுவை காட்‌சிகள் சலிப்பை ஏற்படுத்தாது ‌என்றால் அது மிகையல்ல. 

தனது டைமிங் காமெடி வசனங்‌களால் கிரேஸி மோகனுக்கு தமிழ் சினிமாவில் தனி‌த்துவ இடம் உண்டு. அவரது வசனம் என்பதாலே பஞ்ச தந்திரம், தெனாலி, மைக்கேல் மதன காமராஜன், வசூல் ராஜா எம்பிபிஎஸ் போன்ற‌‌ திரைப்படங்கள் அனைவராலும் மீண்டும் மீண்டும் இன்றும் ரசிக்கப்படுகிறது.

தொடக்‌க காலகட்டங்களில் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்களுக்கு கிரேசி மோகன் எழுதிய‌  வ‌சனங்கள் வழக்கத்தை விட மாறுபட்டு இருந்ததால் பெரும் வரவேற்பை பெற்றது. அபூர்வ சகோதரர்கள் படத்தில் மீட்டருக்கு மேல போட்டுக்கொடுங்க, அப்பு : நானே‌ மீட்டருக்கு மேல இல்லையா!

நடிகர் கமல்ஹாசனின் திரைப்படங்களுக்கு கிரேஸி மோகன் எழுதிய வசனங்கள் மிகவும் பிரபலம். முதன்முதலாக ரஜினிகாந்துக்கு அருணாச்சலம் படத்‌தில் கிரேஸி மோகன் வசனம் எழுதினா‌ர். காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் இடம் பெற்ற டைமிங் காமெடி ‌வசனங்கள் அனைவரையும் வயிறு குலுங்க சிரி‌க்க வைத்தது.

கதாப்பாத்திரங்களின் பெயர்களில் கூட நகைச்‌சுவை உணர்வை கொண்டு வந்தவர் கிரேஸி மோகன். கிரேஸி மோகன் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்தி‌யன் படத்தில் அவர்‌ வரும் ஒரு காட்சி இன்று வரை பேசப்படுகிறது. நகைச்சுவை ஞானி‌ என கமல்ஹாசனால் புகழப்பட்டுள்ள கிரேஸி‌ மோகனின் பெயரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.