கிரில் சிக்கன் சாப்பிடுறீங்களா? அப்ப கேன்சர் வரும்! – ஆய்வில் தகவல்

 

கிரில் சிக்கன் சாப்பிடுறீங்களா? அப்ப கேன்சர் வரும்! – ஆய்வில் தகவல்

கிரில் செய்யப்பட்ட உணவுகளில் இருந்து புற்றுநோய்  ஏற்படும் என்பது முந்தைய ஆய்வு, அதிலிருந்து தப்பித்து கிரில் சிக்கனை எப்படி சுவைப்பது என சொல்கிறது இந்த ஆய்வு.

கிரில் செய்யப்பட்ட உணவுகளில் இருந்து புற்றுநோய்  ஏற்படும் என்பது முந்தைய ஆய்வு, அதிலிருந்து தப்பித்து கிரில் சிக்கனை எப்படி சுவைப்பது என சொல்கிறது இந்த ஆய்வு.

கிரில் சிக்கன் சாப்பிடுவது இப்பெல்லாம் ட்ரெண்டாகிவிட்டது. எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது இந்த கிரில் சிக்கன் தான். நீங்கள் ரோட்டோர ஹோட்டல் கடைகளில் எங்கு பார்த்தாலும் இந்த கிரில் மாமிச உணவுகள் தான் தொங்க விடப்பட்டு சுடச்சுட பரிமாறப்படுகிறது. உண்மையைச் சொல்லப் போனால் இளைஞர்களுக்கு ரெம்பவும் பிடித்தமான ஒரு உணவு கிரில் சிக்கன்.அ ப்படிப்பட்ட க்ரில் வகை மாமிச உணவுகளை சாப்பிடுவதால் புற்று நோய் வருகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.  பார்பிக்யூ போன்ற ரெஸ்டாரென்ட்களில் பயன்படுத்தப்படும் எண்ணெயில்  PHA என்ற நச்சுப்பொருள் உள்ளது.  இது சருமத்தின் வழியாக ஊடுருவி உடலுக்கு கேடு விளைக்க கூடியது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, பன்றிக்கறி, வான்கோழி என எந்த வகையான இறைச்சியை கிரில்லில் வைத்து சுடும் போதும், அதில் இருந்து வெளிப்படும் பாலிசைக்ளிக் அரோமெடிக் ஹைட்ரோகார்பன் மற்றும் ஹீடெரோசைக்ளிக் அமைன்ஸ் என்ற வேதிப்பொருளே புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. இந்த வேதிப்பொருள் வெளியேறுவதை தடுக்க கிரில் செய்யக்கூடிய இறைச்சி துண்டுகளுக்கு இடையே வெங்காயம், குடைமிளகாயை குத்தி சமைக்க வேண்டும். அப்படி செய்தால் பாலிசைக்ளிக் அரோமெடிக் ஹைட்ரோகார்பன் மற்றும் ஹீடெரோசைக்ளிக் அமைன்ஸ் சுரக்காது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

கிரில் சிக்கனில் உள்ள கருகிப் போன எலும்பை சாப்பிடக் கூடாது. இதையெல்லாம் பின்பற்றினால் பாதுகாப்பாக  கிரில் உணவை சுவைக்கலாம்.