கிரிக்கெட்டுக்கு பை-பை சொன்ன ஆல் ரவுண்டர் இர்பான் பதான்!

 

கிரிக்கெட்டுக்கு பை-பை சொன்ன ஆல் ரவுண்டர் இர்பான் பதான்!

இந்திய வீரர் இர்ஃபான் பதான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த டி- 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்தவர் இர்பான் பதான். ஏனெனில் ஃபைனலில் 4 ஓவர்கள் வீசிய பதான் 16 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். கடைசியாக 2012 ஆம் ஆண்டு நடந்த டி-20 உலகக்கோப்பை தொடரிலும் விளையாடினார். 

irfan pathan

இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த இர்பான் பதான் இன்று தனது ஓய்வை அறிவித்துளார். 90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பவுலரான இர்பான் பதான் சியான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக அண்மையில் தகவல்கள் கசிந்தது குறிப்பிடதக்கது.