கிண்டல் அடித்த நெட்டிசன்: தாயை கிழித்து தொங்கவிட்ட நடிகை ரகுல்

 

கிண்டல் அடித்த நெட்டிசன்: தாயை கிழித்து தொங்கவிட்ட நடிகை ரகுல்

நடிகை ரகுல் ப்ரீத் சிங்க் சமீபத்தில் தன்னை அசிங்க படுத்திய நெட்டிசனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது தாயை கிழித்து தொங்கவிட்டுள்ளார்

சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங்க் சமீபத்தில் தன்னை அசிங்க படுத்திய நெட்டிசனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது தாயை கிழித்து  தொங்கவிட்டுள்ளார். 

கார்த்தியின் ‘தீரம் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரகுல் ப்ரீத் சிங், தற்போது சூர்யாவின் ‘என்.ஜி.கே’, கார்த்தியுடன் ‘தேவ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாது தெலுங்கிலும் சில படங்களில் ரகுல் ப்ரீத் சிங் பிசியாக நடித்து வருகிறார்.

rakul preet singh

இந்நிலையில் இவர் சமீபத்தில் சார்ட்ஸ் அணிந்தபடி காரில் இருந்து வெளியில் வரும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதற்கு கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர் “இந்த புகைப்படம் அவர் காரில் அந்த மாதிரி தவறாக இருந்துவிட்டு அவசரத்தில் பேன்ட் அணிய மறந்துவிட்டு வெளியில் வரும்போது எடுத்தது” என ரகுல் ப்ரீத் சிங்க்யை கடுமையாக கிண்டல் செய்துள்ளார்.

எப்போதும் எதையும் கண்டுக்காமல் இருக்கும் ராகுல் ப்ரீத் சிங்க் இந்த முறை அதற்கு பதிலடி கூடுக்கும் படி ஒரு பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில், ” உன் அம்மா இதேபோன்று பலமுறை காரில் இருந்துள்ளார் போலும், அதனால் தான் உனக்கு இதைப்பற்றி நன்கு தெரிந்துள்ளது. உன் அம்மாவிடம் நல்ல புத்திமதியையும், இந்த மாதிரி காரில் நடக்கும் விவரங்களையும் கேட்டு தெரிந்துகொள். இவனைப் போன்ற ஆட்கள் இருக்கும் வரை பெண்களுக்கு பாதுகாப்பே இருக்காது. வெறுமனே சம உரிமை, பெண்கள் பாதுகாப்பு என வாதிடுவதெல்லாம் வீண்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.