காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்; முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.இதனால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு ஊரடங்கு உத்தரவு, அரசியல் தலைவர்களுக்கு வீட்டுக்காவல் என அதிரடி காட்டியுள்ளது மத்திய அரசு. இதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து காஷ்மீரில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்பிகளும் டெல்லி, ஜந்தர் மந்தரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்’ நடத்தப்போவதாக அறிவித்தது.
Today, the MPs from all opposition parties have united at Delhi to protest against the undemocratic acts of the Union Government in the way Art. 370 was abrogated, the State of J&K divided and made UT etc. Democracy survives only when there’s debate and discussion. [1/2] pic.twitter.com/mpcK68EoHp
— P. Wilson (பி. வில்சன்) (@PWilsonDMK) August 22, 2019
அதன்படி இன்று ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், டி.ராஜா, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்