காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் விரைவில் விடுதலையாக பிரார்த்தனை செய்கிறேன்…. ராஜ்நாத் சிங்….

 

காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் விரைவில் விடுதலையாக பிரார்த்தனை செய்கிறேன்…. ராஜ்நாத் சிங்….

காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் விரைவில் விடுதலையாக பிரார்த்தனை செய்வதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. மேலும் அம்மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 புதிய யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, பரூக் அப்துல்லா, பரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகிய காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், பிரிவினைவாதிகளை மத்திய அரசு வீட்டுக்காவில் வைத்தது.

பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியவுடன், வீட்டுக்காவலில் இருந்த தலைவர்களை படிப்படியாக காஷ்மீர் நிர்வாகம் விடுதலை செய்தது. இருப்பினும், காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் உள்பட சில அரசியல் தலைவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐ.ஏ.என்.எஸ். நிறுவனத்துக்கு அளித்து சிறப்பு பேட்டியில் கூறியதாவது: காஷ்மீர் அமைதியாக உள்ளது.  வளர்ச்சியுடன் அங்கு நிலவரம் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது.

மெகபூபா முப்தி

அரசியல் தலைவர்களை விடுதலை செய்வது குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படும். யாரையும் அரசு துன்புறுத்தவில்லை. காஷ்மீரன் நலனுக்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒவ்வொருவரும் அதனை வரவேற்றனர். அப்துல்லாக்கள் மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் முன்கூட்டியே விடுதலையாக  பிரார்த்தனை செய்கிறேன். அவர்கள் வெளியே வந்தவுடன், காஷ்மீரின் நிலவரத்தை முன்னேற்றத்தை நோக்கி உழைத்து அவர்களது பங்களிப்பு இருக்க வேண்டும் எனவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.