“காஷ்மீர் தலைவர்களும், ஃபரூக் அப்துல்லாவும் எங்கே?” தி.மு.க எம்.பி-க்கள் முழக்கம்!

 

“காஷ்மீர் தலைவர்களும், ஃபரூக் அப்துல்லாவும் எங்கே?” தி.மு.க எம்.பி-க்கள் முழக்கம்!

மாநிலங்களவையில்  உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் உருவாக்கப்படுகின்றன. இதில் லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக அமையும் என்றும் அறிவித்தார்.

“காஷ்மீர் தலைவர்களும், ஃபரூக் அப்துல்லாவும் எங்கே?” தி.மு.க எம்.பி-க்கள் முழக்கம்!

மாநிலங்களவையில்  உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் உருவாக்கப்படுகின்றன. இதில் லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக அமையும் என்றும் அறிவித்தார்.

இதற்கு மாநிலங்களவையில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும், மசோதா நிறைவேறியது. 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. 

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகையில், அப்போது பேசிய தி.மு.க உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர், மக்களவை உறுப்பினர் ஃபரூக் அப்துல்லா மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் எங்கே என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும், சபாநாயகரிடமும் கேள்வி எழுப்பினர்.