காஷ்மீரை இரண்டாக பிரித்து தேன் கூட்டில் கைவைத்துவிட்டது பாஜக- வைகோ ஆவேசம்! 

 

காஷ்மீரை இரண்டாக பிரித்து தேன் கூட்டில் கைவைத்துவிட்டது பாஜக- வைகோ ஆவேசம்! 

காஷ்மீரை 2 ஆக பிரித்ததன் மூலம் தேன் கூட்டில் மத்திய அரசு கைவைத்து விட்டதாக வைகோ பேட்டியளித்துள்ளார். 

காஷ்மீரை 2 ஆக பிரித்ததன் மூலம் தேன் கூட்டில் மத்திய அரசு கைவைத்து விட்டதாக வைகோ பேட்டியளித்துள்ளார். 

அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “காஷ்மீரை 2 ஆக பிரித்ததன் மூலம் தேன் கூட்டில் மத்திய அரசு கைவைத்து விட்டது.  காஷ்மீர் பிரச்சனையில் வினை விதைத்து விட்டார்கள். வினை அறுப்பார்கள்.

ஆங்கிலேயர் காலத்துக்கு முன் இந்தியா என்ற நாடே இல்லை. முதுகில் குத்தாதீர்கள் வேண்டுமென்றால் நெஞ்சில் குத்துங்கள் என்று பரூக் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் இளைஞர்கள் உள்ளம் நெருப்பாகியுள்ளது. மூர்க்கத்தனமாக மத்திய அரசு காஷ்மீர் விஷயத்தில் நடந்திருக்கிறது. அபாயகரமான பிரச்சனை இந்தியாவில் உருவாகியுள்ளது. காஷ்மீர் பிரச்சனை பன்னாட்டுப் பிரச்சனையாக உருவெடுக்கும்” என்று கூறினார்.