காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து.. அமித்ஷா அறிவிப்பால் பரபரப்பு!

 

காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து.. அமித்ஷா அறிவிப்பால் பரபரப்பு!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்குள்ள பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள் அடங்கிய 20 பேர் குழு, நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு அந்தக் குழுவினர் அமித்ஷாவிடம் கேட்டுக் கொண்டனர்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்குள்ள பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள் அடங்கிய 20 பேர் குழு, நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு அந்தக் குழுவினர் அமித்ஷாவிடம் கேட்டுக் கொண்டனர். அதற்கு அமித்ஷா, பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

amitshah

அவர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான காப்பீடு வழங்கப்படும் என்றும் கூறினார். அவர்களின் மதிப்பூதியத்தை ரூ.2,500-ல் இருந்து உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
மேலும், காஷ்மீரில் ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்த தலா 5 இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அமித்ஷா கூறினார். 15 முதல் 20 நாட்களில், மொபைல் போன் சேவை சீரமைக்கப்படும் என்று கூறினார். நிலைமை சீரடையும் போது, காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று அவர்களிடம் அமித்ஷா தெரிவித்தார். 

modi

ஏற்கெனவே பிரதமர் மோடி, 370 வது பிரிவு நீக்கத்தால் காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் நிறைய ஏற்படும் என்று அறிவித்திருந்த நிலையில், அமித்ஷா, ஒவ்வொரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களில் 5 பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்தது அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. கிராமத்திற்கு 5 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காகவா இத்தனை ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்று மனதுள் எண்ணியப்படியே கலைந்துச் சென்றார்கள்.