காவிரியின் குறுக்கே 387 கோடியில் புதிய அணை: தமிழக அரசு அறிவிப்பு

 

காவிரியின் குறுக்கே 387 கோடியில் புதிய அணை: தமிழக அரசு அறிவிப்பு

காவிரி ஆற்றில், திருச்சி முக்கொம்பு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை: காவிரி ஆற்றில், திருச்சி முக்கொம்பு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கொட்டித் தீர்த்த தென்மேற்கு பருவ மழையினால், காவிரியின் குறுக்கே திருச்சியில் அமைந்திருக்கும் முக்கொம்பு அணை நிரம்பியது.

வினாடிக்கு 3 லட்சம் கனஅடி வீதம் முக்கொம்பு அணைக்கு தண்ணீர் வந்ததால், 50ஆயிரம் கனஅடி காவிரியிலும், 2.5 லட்சம் கனஅடி நீர் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது. 

mukkombu

அப்போது ஏற்பட்ட கடும் வெள்ளத்தினால், ஆகஸ்ட் 22-ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், 180 ஆண்டுகள் பழமையான முக்கொம்பு அணையின் 45 மதகுகளில் 9 மதகுகள் உடைந்து, கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

cm

இந்நிலையில், முக்கொம்பில் 387 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.