காவியும், காக்கியும் இணைந்து நடத்தும் அத்துமீறலை ஜனநாய சக்திகள் கண்டிக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

 

காவியும், காக்கியும் இணைந்து நடத்தும் அத்துமீறலை ஜனநாய சக்திகள் கண்டிக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான இளம் பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரது முதுகெலும்பு மற்றும் நாக்கு சிதைக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 2 வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும், நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அங்கு இன்று காலை மீண்டும் ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் உயிரிழந்தார்.

காவியும், காக்கியும் இணைந்து நடத்தும் அத்துமீறலை ஜனநாய சக்திகள் கண்டிக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

இவ்வாறு உத்திர பிரதேசத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடருவதை கண்டித்து அங்கு போராட்டங்கள் வெடிக்கின்றன. அதன் காரணமாக, ஹத்ராஸ் மாவட்டத்திற்கு செல்ல போலீசார் தடை விதித்திருக்கும் நிலையில், தடையை மீறி ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “உத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு ஆறுதல் கூறச் சென்ற ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியை உத்தரப்பிரதேச காவல்துறை தடுத்து தள்ளிவிட்டது மிகப்பெரிய அராஜகம், காவியும், காக்கியும் இணைந்து நடத்தும் அத்துமீறலை ஜனநாய சக்திகள் கண்டிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.