காவல் நிலையத்தில் வைத்திருந்த பெட்டியை காணவில்லை என போலீசே போலீசில் புகார்!

 

காவல் நிலையத்தில் வைத்திருந்த பெட்டியை காணவில்லை என போலீசே போலீசில் புகார்!

காவல் நிலையத்தில் வைத்திருந்த தனது பெட்டியை காணவில்லை என தலைமை காவலர் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காவல் நிலையத்தில் வைத்திருந்த தனது பெட்டியை காணவில்லை என தலைமை காவலர் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் முத்துசாமி. இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இரும்பு பெட்டி ஒன்று வாங்கி காவல் நிலையத்தில் உள்ள ஓய்வறையில் வைத்துள்ளார். அதில் அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் துணிகளை வைத்து பூட்டு போட்டு வைத்துள்ளார். மேலும்  பூக்கடை காவல் ஆய்வாளர் புத்தாண்டை முன்னிட்டு புத்தகம் அளித்ததையும் அந்தப் பெட்டிக்குள் வைத்துள்ளார்.

காவல் நிலையம்

இந்த நிலையில் நேற்று காவல் நிலையத்தில் சென்று பெட்டியை பார்த்தபோது பெட்டி காணாமல் போயுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பெட்டியை திருடிச் சென்றது யார்  என கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.