காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மர்ம மரணம் | கொந்தளிப்பில் உறவினர்கள்

 

காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மர்ம மரணம் | கொந்தளிப்பில் உறவினர்கள்

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு  ஆட்டோ ஓட்டுநருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு குறித்து விசாரிப்பதற்காக கரிமேடு காவல் துறையினர் மணிகண்டனை நேற்று மாலை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். 

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு  ஆட்டோ ஓட்டுநருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு குறித்து விசாரிப்பதற்காக கரிமேடு காவல் துறையினர் மணிகண்டனை நேற்று மாலை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். 

arrested

காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற மணிகண்டனை நள்ளிரவு வரையில் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர். இந்நிலையில், நள்ளிரவு திடீரென உடல்நிலை சரியில்லாததால் மணிகண்டனை மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். மணிகண்டனைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே மணிகண்டன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

manikandan

மணிகண்டன் இறந்த தகவல் அறிந்த  மணிகண்டனின் உறவினர்கள், விசாரணைக்காக அழைத்து சென்ற நபரை, காவல்துறையினர் அடித்து கொன்றதாக குற்றம் சாட்டி, காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் மர்ம மரணம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.